அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சீமான் பேச்சிற்கு எதிர்ப்பு: ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படுத்தி பேசி வருவதைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை மதியம் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மீது சிலர் கல் மற்றும் மதுபாட்டிலால் தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

News image
Updated On :1 நவம்பர் 2015, 11:32 am

கோ.ஜெயக்குமார்

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படுத்தி பேசி வருவதைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை மதியம் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மீது சிலர் கல் மற்றும் மதுபாட்டிலால் தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், குறிப்பட்ட ஒரு சமுதாயத்தை பொதுக்கூட்டங்களில் இழிவு படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வந்தாராம். இந்நிலையில் தேனியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் இது குறித்து சீமானிடம் செல்லிடைபேசியில் கேட்ட போது, சீமான் ஜெகசீசனை இழிவாக பேசிய உரையாடல் வாட்ஸ்அப்பில் வேகமாக பரவியது.

இதனால் ஆத்திரமுற்ற சீமானின் ஆதரவாளர்கள் ஜெகதீசனைத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார்.இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நாயுடு-நாயக்கர் இளைஞர் பேரவை என்ற அமைப்பு ஞாயிற்றுக்கிழமை உருவாக்கப்பட்டு, அதன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் முடிந்து வந்த சிலர், ராஜபாளையத்திலிருந்து மம்சாபுரம் வழியே ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மீது மது பாட்டில் மற்றும் கற்களை வீசியுள்ளார்கள். இதில் பேருந்தின் முன்புறக் கண்ணாடி உடைந்தது.

 இது குறித்து பேருந்தை ஓட்டி வந்த சேகர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிலரைப் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.