அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியையிடம் செயினை பறித்துக் கொண்டு கல்வீசி தாக்கிய கணவர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியையின் 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு அவரை கல்வீசி தாக்கி

News image
Updated On :1 நவம்பர் 2015, 4:50 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியையின் 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு அவரை கல்வீசி தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பி ஓடிய கணவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிமேகலை (40). இவர் ரயில் நிலையம் போகும் வழியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ஜெயக்குமார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உண்டு. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையை அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால் ஜெயக்குமார், ஆராய்ச்சிபட்டி தெருவில் போய் இருந்து கொள்வாராம்.

இன்று திடீரென வீட்டிற்கு வந்த ஜெயக்குமார், மணிமேகலை அணிந்திருந்த 5 பவுன் செயினை பறிக்க முயன்றுள்ளார். மணிமேகலை அவரை பறிக்கவிடாமல் தடுக்க எவ்வளவோ முயன்றும் பறித்துக் கொண்டு, வெளியே கிடந்த செங்கலால் மணிமேகலை தலையில் அடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமுற்ற மணிமேகலை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.