அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

விருதுநகர் மாவட்டத்தில் 450 ஊராட்சிகளில் நாளை டெங்கு விழிப்புணர்வு சிறப்புக் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு சிறப்புக் கூட்டத்தை 4-ம் தேதி (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :3 நவம்பர் 2015, 8:06 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு சிறப்புக் கூட்டத்தை 4-ம் தேதி (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து செவ்வாய்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசு ஒழிப்புப் பணிகள், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணிகள் ஆகியவற்றை தொடர்ச்சியாக பல்வேறு துறைகள், உள்ளாட்சி அமைப்புகளையும் ஒருங்கிணைத்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுவாழ்வுத் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதர இயக்கம் ஆகியவற்றின் கீழ் சமுதாய மக்கள் அமைப்புகளான கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றை டெங்கு விழிப்புணர்வு தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தும் விதமாக நவ.4-ம் தேதி மாலை 3 மணிக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படவுள்ளது.

இச் சிறப்புக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.