அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மாவட்ட ஓவியப் போட்டி: வி.பி.எம்.எம். மாணவி ஒட்டு மொத்த சாம்பியன்

விருதுநகர் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு நடைபெற்ற ஓவியப் போட்டியில், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரி மாணவி விஷ்ணுப்பிரியா ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றார்.

News image
Updated On :4 நவம்பர் 2015, 6:39 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு நடைபெற்ற ஓவியப் போட்டியில், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரி மாணவி விஷ்ணுப்பிரியா ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றார்.

தளவாய்புரம், காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப் போட்டியை ராஜபாளையம் சென்ட்ரல் ரோட்டரி கிளப் இணைந்து நடத்தியது.

 இதில் மாவட்டம் முழுவதும் இருந்தும் 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இவர்களில் வி.பி.எம்.எம். பொறியியல் கல்லூரி மாணவி ரஞ்சிதா முதலிடத்தையும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி அனு நந்தினி இரண்டாம் இடத்தையும், கட்டடக் கலைத் துறை மாணவி சரண்யா மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சுகன்யாதேவி, பவித்ரா ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.பொறியியல் இறுதியாண்டு மாணவி விஷ்ணுப்பிரியா ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றார்.

வெற்றி பெற்ற மாணவிகளை கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர், தாளாளர் பழனிச்செல்வி, இணைத் தாளாளர் வி.பி.எம்.எஸ்.தங்கபிரபு, பொறியியல் கல்லூரி முதல்வர் ராஜசேகரன், இயக்குநர்கள் சபரிமாலா, பத்மநாபன் மற்றும் பேராசிரியர்கள் புதன்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.