அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கலசலிங்கம் பல்கலை.யில் மாநில அளவிலான கால்பந்து, கூடைப்பந்துப் போட்டி: நவ.23-க்குள் பதிவு செய்யலாம்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கான மாநில அளவிலான கால்பந்து மற்றும் கூடைப்பந்துப் போட்டிகள் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.

News image
Updated On :14 நவம்பர் 2015, 6:47 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கான மாநில அளவிலான கால்பந்து மற்றும் கூடைப்பந்துப் போட்டிகள் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இது குறித்து பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன், சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்க குறிப்பு:கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாநில அளவில் பள்ளி மாணவ மாணவியருக்கு தனித்தனியான கால்பந்து மற்றும் கூடைப் பந்துப் போட்டிகள் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 15 வயது முதல் 18 வயது வரையுள்ள மாணவ மாணவியர் தனித்தனியே, குழுவுடன் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

வெற்றிபெற்ற மாணவ மாணவியர் குழுவிற்கு தனித்தனியே முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.8 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.போட்டிக்கு வருவோருக்கு தங்கும் இடம் மற்றும் உணவு பல்கலைக்கழகம் சார்பில் இலவசமாக வழங்கப்படும். மேலும் வெற்றி பெற்ற குழுவில் உள்ள மாணவ மாணவியர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2016-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் தொழில்நுட்பத் துறை படிப்பில் சேருவதற்கு கட்டணச் சலுகை அளிக்கப்படும்.

போட்டிக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன், மாணவர் சேர்க்கைப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.என்.ராமசாமி ஆகியோர் செய்து வருகிறார்கள்.பங்கேற்கும் மாணவ மாணவியர் தங்களது பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலமாக நவம்பர் 23-ம் தேதிக்குள் தங்களது பெயர்களை 97882-25996, 97891-23630 ஆகிய செல்போன் எண்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என வேந்தர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.