மகாத்மா வித்யாலயாவில் குழந்தைகள் தின விழா
ஸ்ரீவில்லிபுத்தூர், மகாத்மா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா சனிக்கிழமை தாளாளர் ஜி.முருகேசன் தலைமையில், முதல்வர் எம்.ராணி முன்னிலையில்


ஸ்ரீவில்லிபுத்தூர், மகாத்மா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா சனிக்கிழமை தாளாளர் ஜி.முருகேசன் தலைமையில், முதல்வர் எம்.ராணி முன்னிலையில் நடைபெற்றது. ஆசிரியை ஆர்.ரெனிஸ் வரவேற்றார்.
குழந்தைகளுக்கு ஓவியப் போட்டி, குறுக்கெழுத்துப் போட்டி, தனித்திறனறிதல் போட்டி, நினைவாற்றல் போட்டி, வார்த்தை ஜாலபோட்டி, மாறுவேடப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பி.நதியா, அழகம்மாள் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
விழாவில் ஏராளமான பெற்றோர் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் முடியாயிரம், கே.கற்பகம் ஆகியோர் மேற்பார்வையில் ஆசிரியைகள் செய்திருந்தனர்.
ஆசிரியை ஜே.சுகந்தி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...