அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி: ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பி.இ. பட்டம் முடித்தவருக்கு அரசுப் போக்குவரத்துக்க கழகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக்

News image
Updated On :20 நவம்பர் 2015, 5:00 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பி.இ. பட்டம் முடித்தவருக்கு அரசுப் போக்குவரத்துக்க கழகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த ஒருவரை போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும் இருவரைத் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், பேட்டைக்கடைத் தெருவைச் சேர்ந்தவர் சு.செல்வராஜ் (58). இவரது மகன் செந்தில்நாதன். பி.இ. முடித்துள்ளார். இவருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்குவதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கருப்பையாத் தேவர் மகன் முனியசாமி என்பவரை அணுகியுள்ளார்கள். இவர் சிவகாசி-ஈஞ்சார்-நடுவப்பட்டியைச் சேர்ந்த ரா.வீரையா (55) என்பவரை இது தொடர்பாக அறிமுகம் செய்து வைத்து அவரைப் பார்க்கச் சொல்லியுள்ளார்.

வீரையா தனக்கு சென்னையில் அதிகமாக ஆட்கள் உள்ளதாயும், ரூ.8 லட்சம் கொடுத்தால், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாயும் கூறியுள்ளார். மேலும் முதல் தவணையாக ரூ.3 லட்சம் கேட்டுள்ளார்.

இதன் பேரில் 27.12.14-ம் தேதி ரூ.1 லட்சமும், 16.2.15-ம் தேதி ரூ.2 லட்சமும் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செல்வராஜ் செலுத்தியுள்ளார். ஆனால் குறிப்பிட்டபடி வேலை வாங்கித் தரவில்லையாம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து வீரையாவைக் கைது செய்தனர். மேலும் ஈஞ்சார் தங்கவேல் மகன் வீராச்சாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் முனியசாமி ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.