தமிழகத்தில் பருவ மழையால் ஏற்பட்ட மழை, வெள்ளம் சேதத்தை மதிப்பிட மத்திய அரசு மிகத் தாமதமாக ஒரு குழுவை அனுப்பியுள்ளது. அவர்களும் சில இடங்களை மட்டுமே பார்வையிட்டுவிட்டு, விடைபெற்றுவிட்டனர். உண்மையான சேதங்களை அவர்கள் மதிப்பிடவில்லை. தமிழக முதல்வர் வெள்ள சேதத்தை மதிப்பிட உடனடியா ஒரு குழுவை அமைக்க வேண்டும். முழுமையான பாதிப்புகள் குறித்து தமிழக அரசு பிரதமரிடம் அறிக்கை அளிக்க வேண்டும். மத்திய அரசு, தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். இந்த தொகை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதை விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டதை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும்.