கும்பகர்ணன் போல் உறங்கிக் கொண்டிருந்த பாஜக, இப்போது வாயை திறந்துள்ளது: மாயாவதி

வாக்குகளைச் சேகரிக்கும் நோக்கத்திலேயே பிரதமர் மோடி தலித் பிரச்னைகளை பற்றி பேசுகிறார் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
கும்பகர்ணன் போல் உறங்கிக் கொண்டிருந்த பாஜக, இப்போது வாயை திறந்துள்ளது: மாயாவதி
Updated on
1 min read

புது தில்லி: வாக்குகளைச் சேகரிக்கும் நோக்கத்திலேயே பிரதமர் மோடி தலித் பிரச்னைகளை பற்றி பேசுகிறார் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கும்பகர்ணன் போல் உறங்கிக் கொண்டிருந்த பாஜக, இப்போது கண்விழித்து வாயை திறந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதே ஆகும்.

தலித்-களின் ஓட்டுகளைப் பெறுவதே மோடியின் முக்கிய நோக்கமாகும். இதனால் தான் கடந்த 2 ஆண்டுகளாகத் தலித் பிரச்னை குறித்து வாயைத் திறக்காத மோடி, தெலங்கானாவுக்கு முதன் முறையாக வந்து, ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் தலித்துகள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என்றும்,

பசுப் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்துபவர்களையும் நாட்டைப் பிளவுபடுத்த நினைப்பவர்களையும் நாம் இனம் கண்டுகொண்டு அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் பேசி மக்களை திசை திருப்ப பார்கின்றார் மோடி என்று மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com