புதுச்சேரி,
நடா புயல் எதிரொலியாக புதுச்சேரியில் மழை பாதிப்பு எதுவும் இல்லாததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
வங்கக் கடலில் உருவான நடா புயல் கடலூர் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்திருந்தது. இதையடுத்து புதுச்சேரியில் மாவட்ட நிர்வாகம் தலைமையில் அனைத்து துறைகளும் பேரிடர் ஏற்பட்டால் எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
புயல் பாதிப்பு ஏற்பட்டால் கரையோர மக்கள் தங்க ஏதுவாக 179 பாதுகாப்பு இல்லங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நடா புயல் வலுவிழந்து வெள்ளிக்கிழமை அதிகாலை வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது.
இந்நிலையில் புதுச்சேரியில் போதிய மழை பெய்யவில்லை. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் புதுச்சேரி துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் இறக்கப்பட்டு விட்டது.
கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால், 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கண்ககான மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அவர்களது படகுகள் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.
நிவாரணம் தர கோரிக்கை
இந்நிலையில் கடந்த 3 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் மீனவர்கள் வாழ்க்கை முடங்கி விட்டது. இதனால் தங்களுக்கு நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும் என மீனவர்கள் கோரியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

கோவை சிறையில் கைதிகளுக்கான ரேஷன் பொருள்களை பதுக்கிவைத்தாகப் புகார்!

ஆலங்காயத்தில் பழச்சாறு தொழிற்சாலை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா்!

கீழ்வேளூா்: ரூ. 1.94 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

