டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காஞ்சிபுரம் மாநாடு: தொண்டர்களுக்கு விஜயகாந்த் அழைப்பு

காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெறும் மாநாட்டுக்கு பெருமளவில் தொண்டர்களுக்கு வரவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:29 pm

அரவிந்தன்

காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெறும் மாநாட்டுக்கு பெருமளவில் தொண்டர்களுக்கு வரவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

 இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  தேமுதிகவின் மாநாடு பிப்ரவரி 20-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது. தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் சக்தி தேமுதிக என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

 11 ஆண்டுகளாக தேமுதிக பல்வேறு சோதனைகளைச் சந்தித்தாலும், அதைச் சாதனைகளாக மாற்றி, தேமுதிகவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றதில் தொண்டர்களின் பங்கு மகத்தானதாகும்.

 தமிழகத்தில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது. வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் பெருகியுள்ளது.

 சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது. விவசாயமும் தொழிலும் நலிவடைந்து போய்விட்டது.  இந்த நிலையில் தமிழகத்தை மீட்க வேண்டும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

 அதற்கு அடித்தளமிடும் வகையில் தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு அமைய வேண்டும்.  எனவே, இந்த மாநாடு வரலாற்றில் இடம்பெறும் வகையில் தொண்டர்கள் திரள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.