கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கூடங்குளத்திலிருந்து தமிழகத்துக்குக் கூடுதல் மின்சாரம்  ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

புதியதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள கூடங்குளம் 2-ஆவது அணு உலையில் உற்பத்தி செய்யப்படும்

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:41 pm

அரவிந்தன்

புதியதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள கூடங்குளம் 2-ஆவது அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பாலான பங்கை தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

 இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

 இந்திய - ரஷ்ய நாடுகளின் கூட்டு முயற்சியால் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் அணுஉலை மின்உற்பத்தியை தொடங்கியது. அதிலிருந்து 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, 562 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது.

 தற்போது புதியதாக உற்பத்தியைத் தொடங்கியுள்ள 2-ஆவது அணு உலையின் உற்பத்தி 1,000 மெகாவாட்டை எட்டும்போது தமிழகத்துக்கு 562 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

 இருப்பினும் தமிழகத்தின் பயன்பாட்டுக்கு மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கூடங்குளம் 2-ஆவது அணு உலையில் உற்பத்திó செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பாலான பங்கை தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.