தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பெண்கள் தன்நம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்: நடிகை ரோகிணி

பெண்கள் தன்நம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் என திரைப்பட நடிக்கை ரோகிணி கூறினார்.

News image
Updated On :5 மார்ச் 2016, 2:17 pm

ராஜ்

பெண்கள் தன்நம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் என திரைப்பட நடிக்கை ரோகிணி கூறினார்.

சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியும், ஜேசிஐடைனமிக் சங்கமும் இணைந்து இன்று கல்லூரியில் மகளிர் தினவிழா விழாவினை நடத்தின.

தற்போது பெண்கள் ராணுவம், கடல்படை உள்ளிட்ட கடினமான துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு பெண் இனத்திற்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். உயர் கல்வி படித்துவிட்டு பல பெண்கள் குடும்பம், வீடு என தங்களது எல்லையை சுருக்கிகொண்டு விடுகிறார்கள்.

வெறும் பெருமைக்கு உயர் கல்வி கற்காமல், கற்ற கல்வியை நாட்டிற்கு பயன்படி செயல்பட வேண்டும். சில ஆண்கள் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என தடைவிதிக்கிறார்கள்.

கிராமங்களில் சென்று பாருங்கள், வயல் வேலைகளை செய்ய பெண்கள் இல்லையேற்றால் என்னவாகும்.

நகர் புறங்களில் வேலை வாய்ப்பு உள்ளது. வீட்டிருந்தபடியே கைவினைப்பொருள்கள், உணவுப்பொருள்கள் தயாரிக்கும் பெண்கள் தங்களது பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதோடு, திருமணம் உள்ளிட்ட பெரும் செலவுகளுக்கும் தங்கள் சம்பாதித்த பணத்தை செலவிடுகிறார்கள். இந்த வேலையை பெண்கள் செய்ய இயலாது என சில பெண்களே நினைத்து குறுகிய வட்டத்தினுள் இருந்து விடுகிறார்கள்.

முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை. நம்மால் முடியும் என்ற எண்ணம் பெண்களுக்கு வேண்டும். சமையல் செய்தாலும், அலுவக வேலை செய்தாலும், சொந்தத்தொழில் செய்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செய்தால் வெற்றி பெறலாம். வாசிக்கும் பழக்கம் பெண்களுக்கு அதிகமாக இருக்க வேண்டும். டி.வி. நிகழ்ச்சிகள் பொழுது போக்கு என்றால், வாசிக்கும் பழக்கம் வாழ்கைக்கு உதவும்.

பெண்கள் தன்நம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்றார் ரோகிணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.