ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பாம்பனில் கடல் உள்வாங்கியது: நாட்டுப் படகு மீனவர்கள் தவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் கடல் திடீரென உள்வாங்கியதால் நாட்டுப்படகு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவித்தனர்.

Updated On :1 நவம்பர் 2016, 4:01 pm

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் கடல் திடீரென உள்வாங்கியதால் நாட்டுப்படகு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவித்தனர்.

பாம்பன் பகுதியிலுள்ள சின்னப்பாலம் கடலோரப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட சிறிய நாட்டுப்படகில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்தபிறகு படகுகளை கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருப்பார்கள்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை சின்னப்பாலம் தென் கடல் திடீரென கரையிலிருந்து ஒரு கடல் மைல் தொலைவுக்கு உள்வாங்கியது. இதனால் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட படகுகள் தரைதட்டி சாய்ந்த நிலையில் நின்றன.

இதனால் நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் முடியாமல் தவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.