அங்காரா: துருக்கியில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 மாணவிகள் உள்பட 12 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
தென் துருக்கி மாகாணத்தின் அதானாவில் இருக்கும் பள்ளி விடுதி ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் விடுதியில் இருந்த மாணவிகளில் 11 பேர் மற்றும் விடுதி காப்பாளராக பணிபுரிந்த பெண் உட்பட 12 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த விடுதியில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஏழை மாணவிகள் 34 பேர் தங்கியிருந்துள்ளனர். தீ விபத்தில் குறைந்தது 22 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் மின் கோளாறினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுதியில் இருந்து இதுவரை 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுதியின் தீயை தொலைக்காட்சி ஒளிப்பரப்பை காட்சியை வைத்து அருகில் இருந்து பல மாடி கட்டிடத்தின் வழியாக தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விபத்து நடந்த இடத்தை துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சோயல், துணை பிரதமர் வெய்சி காய்னக் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தண்ணீர் தொட்டியில் சிக்கிய குழந்தைகள்! ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
தில்லியில் ஏசி வெடித்து தீ விபத்து! நிவாரணம் அறிவித்த பிரதமர்

இந்த வாரம் கலாரசிகன் - 03-05-2026

தள்ளிப்போகும் மணிரத்னம் - விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு?
வீடியோக்கள்

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


