நாடாளுமன்ற தேர்தலின் போது நடைபெற்ற தகராறில் தொடரப்பட்ட வழக்கிலிருந்து திமுக பகுதிச் செயலாளர் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2014-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, 118-ஆவது வட்டத்தில் உள்ள திவான் சாகிப் தெருவில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக அதிமுகவினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
இந்த நிலையில், இந்த புகார் குறித்து அதிமுக-திமுகவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுகவைச் சேர்ந்த பழனிச்சாமி, வழக்குரைஞர் சிவக்குமார் ஆகியோர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவினர் மீது புகார் செய்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் அன்புதுரை, வட்டச் செயலாளர் யுவராஜ், மாவட்ட பிரதிநிதி கருணா தங்கம், ஜெயக்குமார், இளைஞரணியை சேர்ந்த வினோத்குமார் மற்றும் கேசவன் ஆகியோர் மீது ராயப்பேட்டை போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு 6-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.தனசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின்னர், குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாததால், அன்புதுரை உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

