சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் சட்டம் பயில வேண்டும்: முதல்வர் நாராயணசாமி

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சட்டம் பயில வேண்டும் என முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.

News image
Updated On :28 ஏப்ரல் 2017, 12:16 pm

DIN

புதுச்சேரி: தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சட்டம் பயில வேண்டும் என முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.
காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி ஆண்டு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வின்சென்ட் அற்புதம் வரவேற்றார். முதல்வர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இக்கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது. நகரில் சிறிய இடத்தில் இயங்கி வந்த இக்கல்லூரி இங்கு அனைத்து வசதிகளுடன் மாற்றப்பட்டது.
பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் இந்த கல்லூரிக்கு வளர்ச்சி எதையும் கொண்டுவரவில்லை. தற்போது காங்கிரஸ் ஆட்சி இக்கல்லூரியில் மீண்டும் வளர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இக்கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்ற முயற்சித்து வருகிறோம்.
சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தமிழில் படிப்பதா? ஆங்கிலத்தில் படிப்பதா? என்ற மன நிலையில் இருப்பர். இரண்டு மொழியிலும் சட்டத்தை படிப்பதே சிறந்தது.
அதுபோல் வாதாட செல்லும்போது தங்களிடம் வருபவர்கள் அனைவரிடமும் உங்கள் வழக்கில் வெற்றி உறுதி என்று வாக்குறுதி அளிக்கக்கூடாது. எந்தெந்த வழக்குகளில் வெற்றி பெறுவோம், எந்தெந்த வழக்குகளில் வெற்றி பெற முடியாது என்பதை தெளிவாக கூறிவிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.