ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கணவன் உட்பட 3 பேரை கொன்று 13 ஆண்டுகளாக செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த பெண் கைது!

மும்பை காந்திப்படாவைச் சேர்ந்த சவிதா பாரதி (43) என்ற பெண் தன் கணவனைக் கொன்று செப்டிக் டேங்கில் புதைத்து வைத்த சம்பவம் 13

News image
Updated On :8 டிசம்பர் 2017, 4:56 am

DIN

மும்பை: மும்பை காந்திப்படாவைச் சேர்ந்த சவிதா பாரதி (43) என்ற பெண் தன் கணவனைக் கொன்று செப்டிக் டேங்கில் புதைத்து வைத்த சம்பவம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை காந்திப்படாவில் சவிதா பார்தி(42) என்ற பெண் விபச்சாரத் தொழில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் வீட்டை பரிசோதனை நடத்தினர். அப்போது, அங்கு விபச்சாரத் தொழில் ஈடுபடுத்தப்பட்ட 4 பெண்களை போலீஸார் மீட்டனர். மேலும், சவிதா பார்தி மற்றும் வாடிக்கையாளர் ஒருவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், அவர் பல கொலைகள் செய்துள்ளதாகவும், சொந்தக் கணவரையே கொலை செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. அந்தத் தகவலின் அடிப்படையில் அவர் வீட்டை மீண்டும் போலீஸார் சோதனை செய்தனர். சோதனையின் போது செப்டிக் டேங்க்கில் அழுகிய நிலையில் எலும்பு கூடுகளாக இருந்த அவரது கணவர் சேதேவ்வின் உடலைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். 

சவீதா பாரதி - சேதேவுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சவீதாபாரதிக்கு கமலேஷ் என்வருடன் கள்ளகாதல் இருந்துவந்துள்ளது. இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வந்தது. 

இதையடுத்து கடந்த 2004-ஆம் ஆண்டு கணவர் சேதேவ் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரை தலையில் அடித்து கொன்று பாத்ரூம் அருகில் உள்ள செப்டிக் டேங்கில் அவரது உடலை தூக்கி எறிந்தாக தெரிவித்துள்ளார்.

 மேலும் அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கணவருடன் சேர்த்து மேலும் 2 பேரை கொலை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து 

சவிதா பாரதியை பால்கார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.