மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராஜஸ்தானில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 26 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2020, 7:48 am

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோப்பூர் மாவட்டத்தின் துபி பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த பயணிகள் போருந்து ஒன்று திடீரென நிலைதடுமாறி இழந்து பனாஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 3 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 26 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளனர். 24 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேருந்து ஆற்றில் விழுந்ததும் அருகில் உள்ள கிராமமக்கள் விரைந்து வந்த மீட்பு பணிகளை செய்து, காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அனைத்து உயர் அதிகாரிகள், காவல்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை தொடங்கியுள்ளனர். ஆற்றில் விழுந்த பேருந்தை கயிற்றை கட்டி வெளியே எடுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவலின்படி, மீட்பு பணிகளில் இதுவரை 26 பேரின் உடல்களை கைப்பற்றினர் என்றும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

பேருந்து அதி வேகமாக வந்ததே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.