தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் படகு, மீன்பிடி வலைகள்.
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் படகு, மீன்பிடி வலைகள்.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் நம்புதளை என்ற கடலோர கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் எல்லை மீறியதற்காக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். மேலும், நாட்டுப் படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து இலங்கை நீதிமன்றத்தில் அவர்கள் அனைவரையும் கடற்படை காவலர்கள் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில், அந்த 4 மீனவர்களையும் ஜூலை 31-ந் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்பின்னர் அந்த 4 மீனவர்களும் இலங்கையின் ஜாஃப்னா சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com