புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி வட்டார கைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் பாண்டெக்ஸ் தலைமை அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியாரிடம் கொள்முதல் செய்து ஏழை எளிய மக்களுக்கு இலவச துணி வகைகள் விநியோகிப்பதை கைவிட வேண்டும். 2017 முதல் இலவச துணிகளை கைத்தறி சட்டத்தறி முலம் உற்பத்தி செய்து விநியோகிக்க வேண்டும்.
கைத்தறி சட்டத்தறி நெசவாளர்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பன நெசவாளர் காலனி அமைக்க வேண்டும், பணி ஓய்வு பெறும் 60 வயதுக்கு மேற்பட்ட நெசவாளர்களுக்கு சட்டப்படி பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி வட்டார கைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினர் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்தொடர்ச்சியாக தட்டாஞ்சாவடி பாண்டெக்ஸ் தலைமை அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் செல்வராசு, செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாநில செயல்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான நாரா. கலைநாதன் போராட்டத்தைத் தொடங்கிவைத்தார். ஏஐடியுசி நிர்வாகிகள் முருகன். அபிஷேகம், தினேஷ் பொன்னையா, கலியபெருமாள், சேதுசெல்வம் உள்பட ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் கலந்துகொண்டனர்,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

கோவை சிறையில் கைதிகளுக்கான ரேஷன் பொருள்களை பதுக்கிவைத்தாகப் புகார்!

ஆலங்காயத்தில் பழச்சாறு தொழிற்சாலை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா்!

கீழ்வேளூா்: ரூ. 1.94 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

