மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட  ரூ.2.06 லட்சம் நகை திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 2.06 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :30 மார்ச் 2017, 12:53 pm

தினமணி

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 2.06 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மலேசியாவிலிருந்து புதன்கிழமை நள்ளிரவு திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். சோதனையில் மலேசியாவிலிருந்து வந்த நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள துளசியாப்பட்டிணம் வண்டுவாஞ்சேரி பகுதியைச் சேரந்த மு. ஷெரிப் என்பவர், தனது உடைமைகளுக்குள் மறைத்து ரூ. 2.06 லட்சம் மதிப்புள்ள 70 கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.