திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு திண்டுக்கல்லில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில் அழைத்துவரப்பட்ட அந்தோணி என்ற கைதி வரும் வழியில் தப்பிச்சென்றார்.
இவர் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் திருப்பூர் அனுப்பூர் பாளையம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரும் போது வழியில் தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.