பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

லஞ்ச ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற நான்கு அரசு அலுவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் அரசுப் பண மோசடி வழக்கில் புதன்கிழமை வழங்கிய

Published On :29 ஜனவரி 2024, 8:03 pm IST

ஸ்ரீவில்லிபுத்தூர்:  ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் அரசுப் பண மோசடி வழக்கில் புதன்கிழமை வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் பணியில் உள்ள நான்கு அரசு அலுவலர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சிவஞானம் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் சிறு சேமிப்புத் தொகைக்கான கமிஷன் தொகையில் ரூ.14.43 லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2007-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் பணியில் உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவர்கள் உள்ளிட்ட 5 பேருக்கும், ஓய்வு பெற்ற ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 6 அரசு ஊழியர்களுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1.21 லட்சம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் தண்டனை பெற்றவர்களில் ஆர்.மகாலட்சுமி, சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராகவும், பி.ராஜலட்சுமி விருதுநகர் உதவி இயக்குநர் (ஊராட்சி) அலுவலகத்தில் உதவியாளராகவும், கே.ஞானசௌந்தரி வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (திட்டம்), டி.கிருஷ்ணமூர்த்தி வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (சத்துணவு) பணியில் உள்ளார்கள்.

இவர்கள் நால்வரையும் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்ற காரணத்திற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சிவஞானம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். தண்டனை பெற்றவர்களில் மற்றொருவரான சந்திரசூடன் என்பவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உதவியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.