புதுவையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

புதுச்சேரியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காரைக்கால் மாவட்ட ஆட்சியராக உளள பி.பார்த்திபன் ஐஏஎஸ், புதுதில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுதில்லியில் இருந்து முகேஷ் பிரசாத் ஐஏஎஸ், புதுச்சேரி மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புதுவை காவல்துறை ஐஜி கண்ணன் ஜெகதீசன் புதுச்சேரியில் இருந்து புதுதில்லிக்கு மாற்றப்பட்டுள்ளார். அதே போல் சீனியர் எஸ்.பியான ஏகே.கவாஸ் புதுவையில் இருந்து கோவா மாநிலத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அபூர்வா குப்தா ஐபிஎஸ் புதுதில்லியில் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com