அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தொடர்ந்து நீர்வரத்து: 100 அடியை எட்டியது பாபநாசம் அணை!

திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது.  2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மாலை பாபநாசம் அணை 100 அடியை எட்டியது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 2:13 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது.  2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மாலை பாபநாசம் அணை 100 அடியை எட்டியது.

வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை நீடித்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது. கடந்த 2 வருடங்களாக பருவ மழை பொய்த்ததால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பாசனம் பொய்த்து விட்டன. பிரதான அணைகளும் வறண்டு குடிநீர் பற்றாக்குறை எழுந்தது. 

இதனிடையே, தென்மேற்கு பருவத்தில் இறுதியில் செப்டம்பர் மாதம் பெய்த மழையில் பிரதான அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்தது. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அக். 5 இல் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 

நிகழாண்டு அக். 26 இல் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கடந்த 2 வாரத்தில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 26 அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 36 அடியும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 27 அடியும் உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை (நவ. 9) மாலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.