தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தில்லியில் பெண் நீதிபதியை கடத்த முயற்சி: கார் ஓட்டுநர் கைது

தில்லியில் பெண் நீதிபதியை கடத்த முயன்ற வாடகை கார் ஓட்டுநரை போலீஸார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

News image
Updated On :28 நவம்பர் 2017, 8:23 am

DIN

புதுதில்லி: தில்லியில் பெண் நீதிபதியை கடத்த முயன்ற வாடகை கார் ஓட்டுநரை போலீஸார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தில்லியில் பெண் நீதிபதி ஒருவர் கர்கர்டூமா நீதிமன்றத்திற்கு செல்வதற்காக கார் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார். ஆனால் ஓட்டுநர் நீதிமன்றத்திற்கு செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை என்எச்24 வழியே ஹாப்பூரை நோக்கி சென்றுள்ளார்.

இதனால் பெண் நீதிபதி போலீஸாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சக நீதிபதியிடமும் இந்த தகவலை உதவிக்கான அழைப்புகளை விடுத்துள்ளார்.  .

சிறிது தொலைவு சென்ற பின்னர் ஓட்டுநர் காரை திருப்பி தில்லியை நோக்கி ஓட்டி வந்துள்ளார். அப்போது சோதனையில் ஈடுபட்டிருந்த காஜ்பூர் போலீஸார் காரை காஜ்பூர் சுங்க சாவடி பகுதியில் தடுத்து நிறுத்தி ஓட்டுநரை கைது செய்தனர். 

விசாரணையில் அவரது பெயர் ராஜீவ் எனவும் துரதிருஷ்டவசம்தாக தான் பாதை மாறி சென்று விட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தனியார் நிறுவன ஓட்டுநர் ராஜீவ் மீது காஜ்பூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் போலீஸார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.