ஹைதராபாத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் 5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டி நேற்று சனிக்கிழமை மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை போலீஸாரும் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹைதராபாத்தின் போன்கிர் பகுதியில் சிலர் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராச்சகோட்டா ஆணையர் சிறப்பு படையை அமைத்து நடவடிக்கை உத்தரவிட்டார்.
இதையடுத்து போன்கிர் பகுதியில் உள்ள ஒரு கோழி கடையில் சிறப்புப் படை போலீஸார் அதிரடியாக சோதனை ஈடுட்டனர். அப்போது கிரிக்கெட் சூதாட்ட கும்பல் தலைவன் இர்ஃபான் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோதனையின்போது அவர்களிடம் இருந்த ஒரு கார் மற்றும் ஐந்து இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றவர்களிடம் இருந்து பணம் பெற்று 30 சதவீத கமிஷனுக்காக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜே.கே டயர் Q4 நிகர லாபம் 80% உயர்வு!

அதர்வா - கயாது லோஹரின் இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதி!

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் லாபம் 33% சரிவு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



