கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

ஒன்றாம் வகுப்பில் மாணவரைச் சேர்க்க ரூ.1 லட்சம் வாங்கிய பள்ளி முதல்வரின் ஜாமீன் மனு தள்ளுபடி 

ஒன்றாம் வகுப்பில் மாணவரைச் சேர்க்க ரூ.1 லட்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பள்ளி முதல்வர்

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 8:36 pm IST

ஒன்றாம் வகுப்பில் மாணவரைச் சேர்க்க ரூ.1 லட்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பள்ளி முதல்வர் ஆனந்தனின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை அசோக்நகர் பகுதியில் உள்ள் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1 ஆம் வகுப்பில் மாணவரைச் சேர்க்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அந்த பள்ளியின் முதல்வர் ஆனந்தனை சிபிஐ போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஆனந்தன் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி திருநீலபிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் முகமது இப்ராஹீம் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார். இதனையடுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.