மும்பை: மராட்டியத்தில் பாதுகாப்பு படை போலீஸாருக்கும் நக்சலைட் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13 நக்சலைட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மராட்டிய மாநிலம் கட்ச்ரோலி மாவட்டம் எட்டப்பள்ளியின் பொரிய வனப்பகுதியில் இன்று காலை 11 மணியளவில் நக்சலைட் தீவிரவாதிகளை தேடும் பணியில் சிறப்பு படை போலீஸ் ஈடுபட்டது. அப்போது மறைந்து இருந்த நக்சலைட்கள் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து நக்சலைட்டுகள் மீது போலீஸார் நடத்திய அதிரடி தாக்குதலில் 13 நக்சலைட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. நக்சலைட் இறப்பு எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
நக்சலைட் தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து எட்டப்பள்ளியின் பொரிய வனப்பகுதிக்கு கூடுதலாக சிறப்பு படை போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துறையூா் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து 26 போ் காயம்

பெருங்களூா் பிடாரி அம்மன் கோயிலில் மது எடுப்பு விழா

நெம்மகோட்டை சித்திவிநாயகா் கோயிலில் தேரோட்டம்

திருவையாறில் ஐயாறப்பா் கோயில் பஞ்ச ரத தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


