6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

​மராட்டியத்தில் போலீஸ் என்கவுண்டர்: 13 நக்சலைட் தீவிரவாதிகள் பலி

மராட்டியத்தில் பாதுகாப்பு படை போலீஸாருக்கும் நக்சலைட் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13 நக்சலைட்

News image
Updated On :22 ஏப்ரல் 2018, 12:56 pm

DIN

மும்பை: மராட்டியத்தில் பாதுகாப்பு படை போலீஸாருக்கும் நக்சலைட் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13 நக்சலைட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

மராட்டிய மாநிலம் கட்ச்ரோலி மாவட்டம் எட்டப்பள்ளியின் பொரிய வனப்பகுதியில் இன்று காலை 11 மணியளவில் நக்சலைட் தீவிரவாதிகளை தேடும் பணியில் சிறப்பு படை போலீஸ் ஈடுபட்டது. அப்போது மறைந்து இருந்த நக்சலைட்கள் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். 

இதையடுத்து நக்சலைட்டுகள் மீது போலீஸார் நடத்திய அதிரடி தாக்குதலில் 13 நக்சலைட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. நக்சலைட் இறப்பு எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

நக்சலைட் தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து எட்டப்பள்ளியின் பொரிய வனப்பகுதிக்கு கூடுதலாக சிறப்பு படை போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.