வேலையே இல்லாமல் இருப்பதற்கு பக்கோடா விற்பது கூட ஒரு வேலைதான் - அமித்ஷா

நாடாளுமன்றத்தில் மோடியின் பேச்சை கிண்டல் செய்து பேசிய எதிர்கட்சியினருக்கு  பதிலடி கொடுக்கும் வகையில்
வேலையே இல்லாமல் இருப்பதற்கு பக்கோடா விற்பது கூட ஒரு வேலைதான் - அமித்ஷா
Updated on
1 min read

நாடாளுமன்றத்தில் மோடியின் பேச்சை கிண்டல் செய்து பேசிய எதிர்கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமித் ஷா இன்று மாநிலங்களவையில் பேசினார். 

அப்போது அவர்  55 ஆண்டுகளாக ஒரே குடும்பம் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் ஏழைகளுக்கு எதிரான கட்சி. பகோடா விற்பதும் ஒரு வேலைவாய்ப்புதான். வேலை இல்லாமல் இருப்பதை விட  இளைஞர் பகோடா விற்று தொழில் செய்வது அவமானமல்ல. 

ஒரு டீ-விற்பனையாளர் பிரதமராக ஆகலாம், யாருக்கு  தெரியும் ஒரு பக்கோடா விற்பனையாளர் ஒருநாள் அடுத்த தலைமுறை  தொழிலதிபர் ஆகலாம் என்று பேசியுள்ளார். மேலும் வேலைவாய்ப்பு குறைந்திருப்பதை ஒப்புக்கொள்வதாக மாநிலங்களவையில் அமித்ஷா கூறியுள்ளார். 

நாட்டில் பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஊழல் குறைந்து விட்டது என்றும் தெரிவித்துள்ளார். முதல்முறையாக மாநிலங்களவையில் அமித்ஷா உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com