எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மலைப்பகுதியில் பலத்த மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 45 அடி உயர்ந்தது

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சேர்வலாறு அணை

News image
Updated On :10 ஜூன் 2018, 3:22 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. 

ஒரே நாளில் சேர்வலாறு அணை நீர்மட்டம் 45 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 10 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 20 அடி, பாபநாசம் அணை நீர்மட்டம் 9 அடியும் உயர்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அணைகளில் பெய்த பலத்த மழையால் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை:  கொடுமுடியாறு அணையில் அதிகபட்சமாக 170 மி.மீ, பாபநாசம் அணையில் 120 மி.மீ, சேர்வலாறு அணையில் 81 மி.மீ, பாபநாசம் கீழ் அணையில் 93 மி.மீ, அடவிநயினார் அணையில் 80 மி.மீ, மணிமுத்தாறு அணையில் 32.6 மி.மீ, கடனாநதி அணையில் 32 மி.மீ, ராமநதி அணையில் 32 மி.மீ, கருப்பாநதி அணையில் 20 மி,மீ, நம்பியாறு அணையில் 15 மி.மீ, கன்னடியன் அணைக்கட்டு}32 மி.மீ, அம்பாசமுத்திரம்}9.8 மி.மீ, ஆய்க்குடி}15.4 மி.மீ,  ராதாபுரம்}23 மி,மீ, செங்கோட்டை}41 மி,மீ, தென்காசி 31 மி,மீ, சேரன்மகாதேவியில் 2.2 மி.மீ.

நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு விநாடிக்கு 6100 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 2400 கனஅடி, கடனாநதி அணைக்கு 249 கனஅடி, ராமநதி அணைக்கு 150 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 180 கனஅடி, வடக்குப்பச்சையாறு அணைக்கு 66.20 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 431 கனஅடி நீர்வரத்து இருந்தது.

இதையடுத்து பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 50.70 அடியாகவும் உயர்ந்துள்ளது.  பராமரிப்பு பணிகளுக்காக சேர்வலாறு அணையில் நீர் சேமித்து வைக்கப்படவில்லை. தற்போது பணிகள் முடிவடைந்ததால் அணையில் நீரை சேமித்து வைக்குமாறு ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து அணைப் பகுதியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரே நாளில் 45 அடி நீர்மட்டம் உயர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 65.29 அடியாக இருந்தது.
மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்ததை அடுத்து நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 76.00 அடியாக உள்ளது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 5.50 அடி உயர்ந்து 55 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 5.50 அடி உயர்ந்து 63.00 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 10 அடி உயர்ந்து 80.00 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 20 அடி உயர்ந்து 32 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 4.50அடி உயர்ந்து 26.50 அடியாகவும் இருந்தது.

பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து விநாடிக்கு தாமிரவருணி ஆற்றில் 920.71 கனஅடி, மணிமுத்தாறு அணையில் விநாடிக்கு 45 கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.