மத்தியப்பிரதேசத்தில் கோர விபத்து: ஜீப் மீது டிராக்டர் மோதி 12 பேர் பலி; 6 பேர் காயம்

மத்தியப்பிரதேசத்தில் கோர விபத்து: ஜீப் மீது டிராக்டர் மோதி 12 பேர் பலி; 6 பேர் காயம்

மத்தியப்பிரதேசத்தில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்தனர். 6 காயமடைந்துள்ளனர். 
Published on


மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேசத்தில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்தனர். 6 காயமடைந்துள்ளனர். 

மத்தியப்பிரதேசம் மாநிலம் மோரேனா பகுதியில் ஜீப் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

தகவல் அறிந்து சம்ம இடத்திற்கு வந்த போலீஸார் மற்றும் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் காயங்களுடன் உயிருக்கு போராடிவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com