கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் கன்னியாஸ்திரி 13 முறை பாலியல் பலாத்காரம்: பிஷப் மீது நடவடிக்கை கோரி புகார்

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில் கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மிரட்டி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் மீது

Published On :


கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில் கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மிரட்டி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் மீது கன்னியாஸ்திரி ஒருவர் கொடுத்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து கோட்டயம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கன்னியாஸ்திரி அளித்துள்ள புகாரில், ‘முதன் முதலாக 2014-ஆம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம்  செய்தார் பிஷப் பிராங்கோ. தொடர்ந்து இதே போல மிரட்டி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சர்ச் நிர்வாகத்திடம் புகார் அளித்தேன். ஆனால், அவர்கள் இதுவரை நடவடிக்க எடுக்கவில்லை என்பதாலேயே தற்போது காவல்துறையில் புகார் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கன்னியாஸ்திரிக்கு எதிராக பிஷப் முல்லாக்கலும் புகார் அளித்துள்ளார். ’இங்கிருந்து அவரை டிரான்ஸ்பர் செய்தோம். கன்னியாஸ்திரியும் அவரது உறவினர்களும் டிரான்ஸ்பர் செய்யக்கூடாது என்றார்கள். பின்னர் மிரட்டினார்கள். அதற்கு பழிவாங்குவதற்காக அடிப்படை ஆதாரம் இல்லாத இந்தப் புகாரை தெரிவித்துள்ளனர்’ என்று பிஷப் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கோட்டயம் காவல்துறை அதிகாரி ஹரிசங்கர் கூறுகையில், ‘இருவரும் மாறி மாறி புகார் அளித்துள்ளதால், இதுகுறித்து குரவிலங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றும் புகார் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு துணை காவல்கண்காணிப்பாளர் தகுதியில் உள்ள ஒரு உயரதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.  

கன்னியாஸ்திரியின் குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரை சர்ச் அதிகாரிகளிடமிருந்து எந்தவித எதிர்ப்பு வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.