உச்ச நீதிமன்ற கெடுப் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து விட்டது. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, நாளை முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழக மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு, உச்சநீதிமன்றம் விதித்துள்ள காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனைத்துக்கட்சி கட்சி கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தை எட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சியினர் பலவிதமான கருத்துக்களையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து கூறுகையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, நாளை முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழக மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம்

ராகுல் - ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் இல்லை: திமுக

மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் பள்ளிகளுக்குத் திரும்ப உத்தரவு

முதல்வரின் செயலா் உமாநாத்துக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை :தோ்தல் ஆணையம் தகவல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


