கர்நாடகாவில் வாக்குப்பதிவு தொடங்கியது: பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா வாக்களிப்பு

கர்நாடகத்தில் 222 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று சனிக்கிழமை (மே 12) காலை 7 தொடங்கி நடைபெற்று வருகிறது. பாஜக
கர்நாடகாவில் வாக்குப்பதிவு தொடங்கியது: பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா வாக்களிப்பு
Published on
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகத்தில் 222 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று சனிக்கிழமை (மே 12) காலை 7 தொடங்கி நடைபெற்று வருகிறது. பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஷிகார்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். 

கர்நாடகத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இதில், ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் பி.என்.விஜயகுமார் காலமானார். இதனால் அத்தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் அட்டைகள் ஒரு வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அத்தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் 5,06,90,538 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 2,56,75,579, பெண்கள் 2,50,09,904, மூன்றாம் பாலினத்தவர் 5,055 பேர் வாக்களிக்கின்றனர்.
70,04,700 வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக மாநிலம் முழுவதும் 80 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 58,302 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்காளர்கள் தங்களது வாக்குகளை வரிசையில் நின்று பதிவு செய்து வருகிறன்றனர். 

சிமோகா தொகுதியில் உள்ள ஷிகார்புரா வாக்குச்சாவடியில் பாஜக முதல்வர் வேட்பாளர் பி.எஸ். எடியூரப்பா தனது வாக்கை பதிவை செய்தார். மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வருமான சதானந்த கவுடா புட்டூரில் வாக்களித்தார்.

பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள 12,001 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இப்போது முதல்முறையாக வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகளும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. 

பாதுகாப்பு பணியில் 1.40 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் 27,672 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3.5 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 15-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com