எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோகரி மீது பாலியல் புகார்

பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோகரி மீதும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :13 அக்டோபர் 2018, 5:24 pm

DIN

பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோகரி மீதும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது விவாதபொருளாக மாறியுள்ள மீடூ விவகாரம் பாலிவுட் முதல் கோலிவுட் திரையுலகையும் தாண்டி, தற்போது விளையாட்டு துறையிலும் புயலை கிளப்பி சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. 

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரணதுங்கா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஆகியோர் மீது பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோகரி மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் டுவிட்டரில் குற்றஞ்சாட்டியுள்ளார். 

கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் பிசிசிஐ தொலைக்காட்சியில் ராகுல் ஜோகரி தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது, தமக்கு வேலை தருவதாகக் கூறி, பாலியல் ரீதியாக தம்மை துன்புறுத்த முயன்றதாக, பெயர் வெளியிட விரும்பாத ஒரு பெண் பத்திரிகையாளர் கூறியுள்ளார். 

அவர் இ-மெயில் மூலம் அனுப்பிய தகவலை, பிரபல பத்திரிகையாளர் ஹர்னித் கவுர் என்ற பெண் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.