கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

என் தந்தை மீதே மீடூ புகார் இருந்தாலும் நான் மீடூ எழுச்சியை தொடர்ந்து ஆதரிக்கவே செய்கிறேன்: நந்திதா தாஸ்!

நந்திதா தாஸின் தந்தை ஜதின் தாஸ் புகழ்பெற்ற ஓவியர். அவர் தனது ஓவியத்திறமைக்காக பத்பபூஷன் விருது பெற்றவர். அவர் மீது தான், நிஷா போரா எனும் பெண் தற்போது மீடூ குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 

News image
Updated On :17 அக்டோபர் 2018, 6:11 am

சரோஜினி

நடிகை நந்திதா தாஸை நினைவிருக்கிறதா? அழகி திரைப்படத்தில் வந்து தமிழர்களின் மனம் கவர்ந்தாரே அவரே தான். இவருடைய தந்தை ஜதின் தாஸ் புகழ்பெற்ற ஓவியர். அவர் தனது ஓவியத்திறமைக்காக பத்பபூஷன் விருது பெற்றவர். அவர் மீது தான், நிஷா போரா எனும் பெண் தற்போது மீடூ குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 

தன் தந்தை மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை அதைக் குறித்து தான் எதையும் சொல்ல முடியாத போதும், பணியிடங்களில் பாலியல் தொந்திரவுக்கு ஆளாகக் கூடிய பெண்களுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் மீட்டுத் தரும் வகையிலும், பெண்கள் அனுபவித்த மன உளைச்சலுக்கு மருந்திடும் வகையிலும் இந்தியாவில் கிளர்ந்தெழுந்துள்ள மீடூ எழுச்சியை நான் தொடர்ந்து ஆதரிக்கவே செய்கிறேன் என்று நடிகையும், ஓவியர் ஜதின் தாஸின் மகளுமான நந்திதா தாஸ் தெரிவித்துள்ளார்.

ஜதின் தாஸ்... நிஷா போரா...

ஜதின் தாஸ்... நிஷா போரா...

ஜதின் தாஸ் மீது மீடூ குற்றச்சாட்டை முன் வைத்துள்ள நிஷா போரா, தன்னுடைய 28 வது வயதில் தான் பிரபல ஓவியர் ஜதின் தாஸை ஒரு இரவு விருந்தில் சந்தித்ததாகவும், அப்போது அவர் கிட்கி கிராமத்தில் இருக்கும் தன்னுடைய ஓவியப் பட்டறையில் சில நாட்களுக்கு தன்னுடைய உதவியாளராகப் பணிபுரிய முடியுமா என்று தன்னிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் மறுநாள் அவரது வேண்டுகோளை ஏற்று தான் அந்தக் கிராமத்திற்குச் சென்று அவருடன் பணிபுரிய சம்மதம் தெரிவித்ததும் அங்கு வைத்து அவர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜதின் தாஸின் திடீர் பாலியல் தாக்குதலால் நிலைகுலைந்த போதும் விரைவில் சுதாரித்துக் கொண்டு அவரைத் தாக்கி விட்டு தான் தப்பியோடிய போது, போகாதே நில்... நான் நன்றாகச் செயல்படுவேன்’ என்று விஷமத்தனமாகப் பேசி தன்னை அவர் தடுத்ததாகவும்... நிஷா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் நிஷாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜதின் தாஸ். இது முற்றிலும் வக்கிரத்தனமான குற்றச்சாட்டு என அதைப் பற்றி குறிப்பிட்டு, இப்போதெல்லாம் யார் யாரோ வருகிறார்கள்... திடீரென யார் மீதாவது பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டை எழுப்புகிறார்கள். அதில் சில குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதாக இருக்கலாம். ஆனால், ஒருசிலர் ஒரு கேளிக்கை விளையாட்டுப் போல குற்றமற்றவர்களின் மீதும் குற்றம் சுமத்தி சோதிக்கிறார்கள். இந்த நிலை கண்டு நான் அதிர்ச்சியடைந்திருக்கிறேன். என்று தன் மீதான குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றி இருக்கிறார் ஜதின் தாஸ்.

தந்தையைப் போலவே நடிகை நந்திதா தாஸும், மீடூ பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மிகப்பெரிய வரப்பிரசாதம்... ஆனால் சிலர் பழிவாங்கலுக்காகவோ, விளையாட்டுத்தனமாகவோ இப்படிப்பட்ட குற்றச்சாட்டை பிறர் மீது வைக்கும் போது தன்னியல்பாக கிளர்ந்தெழுந்துள்ள மீடூ இயக்கத்தின் நோக்கம் நீர்த்துப்  போக வழிவகுப்பதாக இருக்கிறது. எனவே இவ்விஷயத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்புபவர்கள் சற்றுக் கவனமாக இருக்க வேண்டும். என்று தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார் நந்திதா தாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.