புதுதில்லி: பிகார் முதல்வர் நிதிஷ் குமார் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீரென உடல் நலம் பாதிகப்பட்ட நிதிஷ் குமார் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் தனிப்பிரிவில் இன்று காலை 8.30 மணியளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
காய்ச்சல் மற்றும் கண்கள், கால் மூட்டுகளில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாகவும் நிதிஷ் குமார் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதிஷ் குமார் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதற்கான சரியான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.