ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கருணாஸ் புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றம்

முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ், வேலூர் சிறைக்கு

News image
Updated On :23 செப்டம்பர் 2018, 10:23 am

DIN


சென்னை: முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ், வேலூர் சிறைக்கு மாற்றப்படுகிறார்.  

திருவாடனைத் தொகுதி எம்எல்ஏ கருணாஸ், நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் கடந்த 16-ஆம் தேதி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த அந்த அமைப்பின் தலைவர் நடிகரும், திருவாடனைத் தொகுதி எம்எல்ஏ-வுமான கருணாஸ் பேசுகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் உள்ளிட்டோரை மிகவும் அவதூறாக பேசினார்.

இதையடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் மீது கூட்டுச் சதி, வன்முறையை தூண்டி விடுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 சட்டப் பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர். 

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னை சாலிகிராமத்திலுள்ள கருணாஸ் வீட்டிற்கு 2 காவல் ஆய்வாளர்கள், 2 உதவி ஆணையர்கள் மற்றும் 100க்கும் மேற்பட போலீஸார் வந்தனர். இதையடுத்து போலீஸார் கருணாஸை கைது செய்தனர்.

அவரிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், எழும்பூர் 13-ஆவது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கருணாஸ் கைது குறித்து பேரவைத் தலைவரிடம் தெரிவித்ததாக நீதிபதியிடம் காவல்துறையினர் கூறினர்.

கொலை முயற்சி வழக்கு (307-வது பிரிவு) நீக்கப்பட்டு எம்எல்ஏ கருணாஸ் அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கருணாஸ் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கருணாஸ் தரப்பில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்று அவருடைய வழக்குரைஞர் ராஜா தெரிவித்தார். 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட எம்எல்ஏ கருணாஸ் புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறார். அவர் மீது கூடுதலாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ் புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறார்.  அவர் மீது கூடுதலாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.