தெரியாமல் தற்செயலாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட விமானப்படை துணைத் தளபதி! 

இந்திய விமானப்படையின் துணைத் தளபதியான ஏர்மார்ஷல் எஸ்.பி. தியோ தெரியாமல் தற்செயலாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் தொடையில்
தெரியாமல் தற்செயலாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட விமானப்படை துணைத் தளபதி! 
Updated on
1 min read

புதுதில்லி: இந்திய விமானப்படையின் துணைத் தளபதியான ஏர்மார்ஷல் எஸ்.பி. தியோ தெரியாமல் தற்செயலாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் தொடையில் குண்டடி பட்டுக் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஏர்மார்ஷல் எஸ்.பி. தியோவின் துப்பாக்கி கைதவறி தற்செயலாக தொடையில் சுட்டுக்கொண்டதில் தொடையில் குண்டடி பட்டுக் காயமடைந்திருப்பதாகவும், தில்லியில் உள்ள ஒரு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விமானப்படைத் தரப்பில் அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வெளியாகவில்லை. அவரது உடல் நிலை குறித்த விவரமும் வெளியிடப்படவில்லை. 

1979 -ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி விமானப்படையில் பைலட்டாக சேர்ந்து தனது சேவையைத் தொடங்கியவர் எஸ்.பி. தியோ. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை முதல் துணைத் தளபதியாக பணியாற்றி வருகிறார். இவர் வெலிங்டனில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்ற முன்னாள் மாணவர் ஆவார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com