அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதிபர் டொனால்ட் டிரம்பை பதவிநீக்கக் கோரும் தீர்மானம் நிறைவேறியது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 220க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான இரு மசோதாக்கள் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் புதன்கிழமை நள்ளிரவு விவாதம் தொடங்கியது.
விவாதம் நிறைவடைந்த நிலையில, மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாக்களை கொண்டு வந்த ஜனநாயகக் கட்சியினருக்கு கீழவையில் போதுமான பலம் இருந்ததால், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து, அந்த இரு மசோதாக்களும் அடுத்த மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையில் விசாரணைக்காக தாக்கல் செய்யப்படும். அங்கு டிரம்பின் குடியரசுக் கட்சியினரின் பலம் அதிகமாக உள்ளதால், அவரது பதவி நீக்கம் தொடர்பான மசோதா செனட் சபையில் நிராகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது