எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்!

கர்நாடக முதல்வராக எடியூரப்பா 4வது முறையாக பதவிற்றார். ஒரு வாரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு விதித்துள்ளார். 

News image
Updated On :26 ஜூலை 2019, 1:23 pm

DIN


கர்நாடக முதல்வராக எடியூரப்பா 4வது முறையாக பதவிற்றார். ஒரு வாரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு விதித்துள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தோல்வியடைந்தது. முதல்வர் குமாரசாமி ஆளுநரை சந்தித்து ராஜிநாமா கடிதம் அளித்துவிட்டார். உடனடியாக, எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றுவரை அதுகுறித்து ஏதும் தகவல் வெளியாகவில்லை. அதேசமயம், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள ஆட்சி கவிழ காரணமான எம்எல்ஏக்களில் 3 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். மற்ற அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதம் குறித்தும் முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை, எடியூரப்பாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக்கோரினார். 

ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள கடிதத்தை காட்டினார். இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் எடியூரப்பா தெரிவித்தார். 

இந்நிலையில், கர்நாடக முதல்வராக 4-வது முறையாக எடியூரப்பா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பாவுக்கு ஒரு வாரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு விதித்துள்ளார். 

கர்நாடகா ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். பெரும்பான்மையை நிரூபித்த பிறகு அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.