சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்ததை அடுத்து அவரது அமர்வுக்கான வழக்கு பட்டியல் இன்றும் வெளியிடப்படவில்லை.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வுக்கான வழக்கு பட்டியல் இன்று வெளியிடப்படாத நிலையில், தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க வேண்டிய அவசர வழக்குகளை 2-வது நீதிபதி வினீத் கோத்தாரி, சரவணன் அமர்வு விசாரிக்கும் என்றும், தலைமை நீதிபதியுடன் அமர்ந்து வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி துரைசாமிக்கு தனியாக வழக்குகள் ஒதுக்கீடு செய்து தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.