எந்த உதவி வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் செய்கிறேன்: சுபஸ்ரீயின் பெற்றோருக்கு விஜய பிரபாகரன் ஆறுதல்
விளம்பரப் பலகை விழுந்ததில் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்தாரிடம் எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், எந்த நேரத்திலும் செய்வேன் என்று தெரிவித்தார்.
விளம்பரப் பலகை விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் குரோம்பேட்டையில் உள்ள இல்லத்துக்கு விஜய பிரபாகரன் ஞாயிற்றுக்கிழமை சென்றார். அவரது குடும்பத்தினரைச் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். அவர்களிடம் எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், எந்த நேரத்திலும் செய்வேன் என்று தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக பேனர் விழுந்ததால் அது சர்ச்சையானது. ஒரு தனியார் பேனர் விழுந்திருந்தால் அது இந்தளவிற்கு சர்ச்சையாகி இருக்காது என்பது என கருத்து என்றவர், பேனர் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றினால் சரியாக இருக்கும் என்றார்.
மேலும் பேனர் விவகாரத்தில் நடிகர் விஜய் தெரிவித்திருக்கும் கருத்து அவருடைய சொந்தக் கருத்து என தெரிவித்தார்.