திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

தேர்தல் ஆணையர் அசோக் லவாசா மனைவி நோவலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

இந்த தேர்தல் ஆணையராக அசோக் லவாசா பொறுப்பேற்ற பின்னர் அவரது மனைவி நோவல், இவர் பல நிறுவனங்களில் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:11 am

DIN


புதுதில்லி: இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இந்த தேர்தல் ஆணையராக அசோக் லவாசா பொறுப்பேற்ற பின்னர் அவரது மனைவி நோவல், இவர் பல நிறுவனங்களில் இயக்குநராக பணியாற்றியுள்ளார். பராத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி 2005 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜிநாமா செய்தவர். 

இந்நிலையில் அவருக்கு வருமான வரித்துறை நேற்று திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது, அன்னிய செலாவணி தொடர்பாக நோவல் தாக்கல் செய்துள்ள வருவமான வரி கணக்கில் முரண்பாடு இருப்பதால், அது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டுமொன வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

வருமான வரித்துறையின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து நோவல் கூறியதாவது: தனது ஓய்வூதியம், இதர வருமானங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வருமான வரித்துறைக்கு தெரிவித்துள்ளேன். கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியில் பெறப்பட்ட வருமான வரித்துறை நோட்டீஸ்களுக்கும் பதில் தெரிவித்துவிட்டேன் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

கடந்த 28 ஆண்டுகளாக, வங்கி மற்றும் நிறுவன் மேம்பாடுகளில் நல்ல அனுபவத்தை பெற்றுள்ளதால், ஒரு சில நிறுவனங்களில் இயக்குநர் உள்பட பல்வேறு தொழில்முறை நடவடிக்கைளில் நான் தொடர்ந்து வருகிறேன் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கடந்த 17-வது மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான முடிவுகளில் தலைமை தேர்தல் ஆணையளர் சுனில் அரோரா மற்றும் மற்றொரு தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா ஆகியோர் தன்னுடைய கருத்துக்களை ஏற்பதில்லை என்ற குற்றச்சாட்டு தலைப்புச் செய்திகளாக வெளிவந்தது. தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறி பரபரபப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.