எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தூத்துக்குடியில் நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடிய பெண்ணின் கணவர் தற்கொலை

தூத்துக்குடியில் 100 பவுன் நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடி கைதான பெண்ணின் கணவர் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

News image
Updated On :8 ஏப்ரல் 2020, 3:53 am

DIN


தூத்துக்குடி: தூத்துக்குடியில் 100 பவுன் நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடி கைதான பெண்ணின் கணவர் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் அருகேயுள்ள பெரிய செல்வம் நகரை சேர்ந்தவர் வின்சென்ட். துறைமுக ஊழியர். இவரது வீட்டில் இருந்த 100 பவுன் நகைகள் திடீரென மாயமாகின. 

இதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில் நகைகளை வின்சென்ட் மனைவி ஜான்சி மறைத்து வைத்து திருட்டு போனதாக நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து ஜான்சியை போலீஸார் கைது செய்தனர். 

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த வின்சென்ட் புதன்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.  

இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.