கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேனி மாவட்டத்தில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

தேனி மாவட்டத்தில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News image
தேனி மாவட்டத்தில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
Updated On :1 ஆகஸ்ட் 2020, 7:16 am

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டத்தில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சீலையம்பட்டி, கோட்டூர், பூமலைகுண்டு, கோடாங்கிப்பட்டி என மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பூக்கள் விளைவிக்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக பூக்கள் விலை வெகுவாக குறைந்தது .

சீலையம்பட்டி போன்ற இடங்களில் தோட்டத்தில் விளைவிக்கபட்ட பூக்களை கூட பறிக்க முடியாத சூழ்நிலையில் மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வந்தன. இதற்கிடையே கடந்த சில நாட்களாக பூக்களின் தேவை அதிகமானதால் விலை கணிசமாக உயர்ந்து வந்தது.

மேலும் பக்ரீத், சனிப்பிரதோஷம் அதனை தொடர்ந்து ஆடி பதினெட்டாம் பெருக்கு போன்ற சுபநிகழ்ச்சிகள் தொடர்ந்து வருவதால் பூக்களின் தேவை அதிகரித்து விலை கிடுகிடுவென உயர்ந்தன.

இதன் மூலமாக மாவட்டத்தில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ. 900, ஜாதிப்பூ  ரூ. 700, முல்லைப் பூ  ரூ. 800, சம்பங்கி ரூ 300, துளசி ரூ. 100 என அனைத்துப் புகழும் விலை பல மடங்கு உயர்ந்தது விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த நான்கு மாதங்களாக விவசாயிகளுக்கு எவ்வித வருமானம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டனர். விளைவிக்கப் பட்ட பூக்களை கூட பறிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தற்போது பூக்களின் வரத்து குறைந்த நிலையில் பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் பூக்களை வாங்க ஆர்வம் காட்டி வருவதால் பூக்களுக்கு விலை கிடைத்து  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.