உடலைப் பார்த்து திருமூர்த்தியின் மனைவி தமிழரசி, மகள் அகல்யா, மகன் அகத்தியன் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் திருமூர்த்திக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அவரது உடலுக்கு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து மன்னார்குடி முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவா.ராஜமாணிக்கம், ஒன்றியக்குழுத்தலைவர்கள் நீடாமங்கலம் வக்கீல் சோம.செந்தமிழ்ச்செல்வன்,மன்னார்குடி சேரன்குளம் மனோகரன் மற்றும் உள்ளாட்சி மக்கள் பிரிதிநிதிகள்,அரசு அதிகாரிகள் ,பொதுமக்கள் பலரும் மலர்வளையம் வைத்தும் மலர் மாலைவைத்தும் மரியாதை செலுத்தினர்.