மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நொய்டாவில் பெண்கள் பாதுகாப்பிற்காக இருசக்கர ரோந்து வாகன போலீஸ் படை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் வகையில் பெண் காவல்படை உருவாக்கப்பட்டுள்ளது.

News image
பெண்கள் பாதுகாப்பிற்காக இருசக்கர ரோந்து வாகன போலீஸ் படை
Updated On :2 ஆகஸ்ட் 2020, 10:32 am

DIN

நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் வகையில் பெண் காவல்படை உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ரோந்து பணியில் ஈடுபடும் வகையில் பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் இன்று துவங்கப்பட்டது. இதனை காவல் ஆணையர் அலோக் சிங் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதுகுறித்து பேசிய பெண்கள் பாதுகாப்பு துணை ஆணையர் பி.சிக்லா, பெண்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பெண் காவலர்கள், இருசக்கர வாகனங்களில் ரோந்துப்பணியில் ஈடுபடுவார்கள் எனக் கூறினார்.

மேலும் இதுகுறித்து அவர் பேசியபோது, எங்களிடம் 100 இரு சக்கர வாகனங்கள் உள்ளன. அவை பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படும். பெண்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் 12 - 13 இருசக்கர வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும். குறைவான பகுதிகளில் 2 - 3 இருசக்கர வாகனங்கள் ரோந்தில் ஈடுபடும் என தெரிவித்தார்.

ஊரடங்கு முடிந்த பிறகு ரோந்து பணியில் ஈடுபடும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.